வழிகாட்டும் குறள் மணி(65).
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சுஆணி அன்னார் உடைத்து.(திருக்குறள் 667).
விளக்கம்:
வலிமை வாய்ந்த மிகப்பெரிய சக்கரங்களைக் கொண்ட தேர்க்கு மிகச் சிறிய அச்சாணியின் பணி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அது போன்றோர் உலகில் நிறைய உள்ளனர்.எனவே, ஒருவருடைய சிறிய உருவத்தினைக் கண்டு இகழ்ந்து பேசுதல் கூடாது.
அதிகாரம்:
வினைத்திட்பம்.( அதிகார வரிசை 67).
.jpg)