தூத்துக்குடியில், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவி்ல்லை.
இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மீனவர்களுக்கு மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் எச்சரிக்கை தகவல் அளித்ததை தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 265 விசை படகுகள் மற்றும் நாட்டு படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரிய தாழை வரையிலான மீனவ கிராமங்களில் சுமார்
400ற்கும் மேற்பட்ட விசைப்படகுகள்.
3000ற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், பைபர் படகுகள் என சுமார் 5000 படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லமால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
