இலங்கை: என்ன ஆனது இலங்கையில்? குழந்தை பிறப்பு சதவீதம் மிகப்பெரும் வீழ்ச்சி!

sen reporter
0


 இலங்கையில் குழந்தை பிறப்பு சதவீதம் மிகப்பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையை பொருத்தவரை முன்னர் ஐந்து வயதானவுடன் 3 இலட்சத்து 40 ஆயிரம் பிள்ளைகள் பாடசாலைகளைக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 

2இலட்சத்து 90 ஆயிரம் ஆக குறைவடைந்துள்ளது.


இவங்கை நாட்டில் பிறப்பு சதவீதம் குறைந்தமையால், பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 50, ஆயிரமாக குறைந்துள்ளது என கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.


பாடசாலைகளுக்கு ஐந்து வயது நிறைவடைந்தவுடன் மாணவர்களாக பள்ளியில் சேர்க்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.


 பாடசாலைகளுக்கு தற்போது உள்ளீர்க்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 90 ஆயிரம் பேராகும். 


எனினும், இன்றைக்கு பத்து வருடங்களுக்கு முன்னர், பாடசாலைகளுக்கு 3 இலட்சத்து 40 ஆயிரம் பிள்ளைகள் உள்ளீர்க்கப்பட்டனர் என்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top