கிருஷ்ணகிரி: சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபர்! வாகனத்துடன் ஐந்து லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!! தெரிந்து செய்கிறார்களா? தெரியாமல் செய்கிறார்களா?? புரியவில்லை ..

sen reporter
0


 சட்டவிரோதமாக வெளி மாநிலத்தில் இருந்து 5,29,920  ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபர் கைது.


வாகனத்துடன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த சிப்காட் காவல் நிலைய போலீசார்.கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது வெளி மாநிலத்திலிருந்து குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் ஜூஜூவாடி செக்போஸ்ட்  அருகே வாகன சோதனை செய்தனர்.


அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 5,29,920ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது. குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வந்த  நபரை  கைது செய்து,வாகனத்துடன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்தனர்.


 சட்டவிரோதமாக குட்கா கடத்தியவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top