தூத்துக்குடி மாவட்டம்: முத்தையாபுரம்: தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே லாரி மோதியதில் தாய்,மகன் உயிரிழப்பு! சாலையை கடக்கும்போது நிகழ்ந்த பரிதாபம்!?

sen reporter
0


 தூத்துக்குடியில் சாலையை கடந்து செல்ல முயன்றபோது லாரி மோதி தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். 



தூத்துக்குடி முத்தையாபுரம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள ஒரு டீக்கடையில் பெண் ஒருவர் சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க தனது மகனுடன் டீ குடித்துவிட்டு தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோட்டை கடந்து சென்றார். 


அப்போது திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு சரக்கு ஏற்றி வந்த லாரி அவர்கள் மீது மோதியதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 


இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடலையும் மீட்டு, பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


விபத்தில் பலியான தாய் மகன் யார் என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top