நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புத்தூர்வயலில் யானை தாக்குதல், அச்சுறுத்தல்களுக்கு தமிழக முதல்வர் தீர்வு கொடுப்பாரா? மக்கள் எதிர்பார்ப்பு!!!

sen reporter
0

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் தொடர்ந்து பொதுமக்கள் யானை தாக்குதலுக்கு உள்ளாகி  வருவதால் அப்பகுதியில் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இப்பகுதியில் பள்ளி பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி செல்லும் நேரத்தில் நடுசாலையை மறைத்து யானைகள் சுற்றி திரிவதால் பள்ளி செல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். மேலும்,இந்த யானைகள் அச்சுறுத்தலால் அவசர காலங்களில் பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கும் அச்சப்படுகின்றனர். கடந்த சில நாட்களாக கூடலூர் சுற்றுப்பகுதிகளில்  யானைகள் 



தாக்குதலால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். உயிர்பலி அச்சத்தால் குழந்தைகள் பள்ளி செல்வதற்கு பயந்தும்,பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கும் பயந்தவாறே வாழ்ந்து வருகின்றனர். யானைகளின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண வனத்துறை அதிகாரிகளிடம் 



இப்பகுதி மக்கள்  கோரிக்கைகள் பல வைத்தவாறே உள்ளனர். 



இதுகுறித்து பள்ளி குழந்தைகளின் எதிர்கால படிப்புகள் குறித்தும், பொதுமக்கள் நலன் கருதியும் யானைகளின் தாக்குதல்களில் இருந்து எங்களை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் ஒற்றை கோரிக்கை விடுத்துள்ளனர்.
 



Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top