சென்னையிலிருந்து காட்பாடி வந்த ரயிலில் சிக்கியபடி வந்த இளைஞரின் உடல் மீட்பு!

sen reporter
0


 சென்னையிலிருந்து காட்பாடி வந்த ரயிலில் சிக்கியபடி வந்த இளைஞரின் உடல் மீட்பு! 

சென்னை சென்ட்ரல் ரயில்நிலலையத்தில் இருந்து  ஆலப்புழா அதிவிரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. நள்ளிரவு சுமார் 11..45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயில் இன்ஜினின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான நிலையில் இளைஞரின் சடலம் ஒன்று சிக்கி இருந்தது. இதனை கண்ட ரயில் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு கீழே இறங்கிய ரயில் என்ஜின் டிரைவர் ரயிலில் இளைஞரின் உடல் சிக்கியிருந்ததை கண்டு திடுக்கிட்டார். இது குறித்த தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரயில் இன்ஜினில் இரண்டு துண்டாக சிக்கி இருந்த இளைஞரின் உடலை கைப்பற்றினர்.. மேலும் அவரின் கால்களை தேடும் பணியில் ரயில்வே போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top