மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று பெரியார் நகர் மருத்துவமனையில்
August 05, 2024
0
தரை மற்றும் 6 தளங்களுடன் 109கோடியே 89இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா,நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கலாநிதி வீராசாமி,சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. தாயகம் கவி,திரு. அ. வெற்றியழகன்,திரு. ஜோசப் சாமுவேல்,பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன்,இ.ஆ.ப.,மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்