வேலூர்: புகார் மீது நடவடிக்கை எடுக்காத ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள் ஆயுதப்படைக்கு இடமாற்றம்!

sen reporter
0


 வேலூர்மாவட்டம்வேப்பங்குப்பம் காவல் நிலைய ஆய்வாளராக சுரேஷ்பாபு பணியாற்றி வந்தார். இவர் தனது பணியை சரியாக செய்யாததாலும் வழக்கு பதிவு செய்வதில் அலட்சியம் காண்பித்ததாகவும் எழுந்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் உதவி ஆய்வாளர் குமார் ,சிறப்பு உதவி ஆய்வாளர் கோபிநாதன் ஆகியோர் ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது கடந்த 19ஆம் தேதி பாக்கம்பாளையம் அருகே உள்ள ஒரு ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு இன்ஸ்டாவில் மற்றொரு பெண்ணிடம் தொடர்பில் இருந்ததை தட்டி கேட்டதால் தன்னிடம் தனிமையில் இருந்த வீடியோ போட்டோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன் என கூறி மிரட்டியதாக வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். இதனை உரிய நேரத்தில் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்ய தவறியதாகவும் ,மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக எல்லப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மோதிக்கொண்ட போது போதிய பாதுகாப்பு கொடுக்க தவறியதாக கூறி காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு, உதவி ஆய்வாளர் குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் கோபிநாதன ஆகியோரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து வேலூர் மாவட்டகாவல்கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார் இந்தசம்பவம்காவல்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top