கோவை: ஒருங்கிணைந்த வேளான் விரிவாக்க மைய புதிய கட்டிடம் அமைக்க 9 செண்ட் நிலத்தை வேளான் உதவி இயக்குனர் சக்திவேலிடம், முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
9/26/2024
0
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் புதிய ஒருங்கிணைந்த வேளான் விரிவாக்க கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேவைபட்ட நிலையில் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், பெருந்தலைவர் மதுமதிவிஜயகுமார் தலைமையில் நடைபெற்ற கவுண்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில் 9 செண்ட் நிலம் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் அதற்கான உத்திரவு நகல் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு, வேளான் உதவி இயக்குனர் சக்திவேலிடம் உத்திரவு நகலை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலாராணி, தொண்டாமுத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் மதுமதி விஜயகுமார் மற்றும் கவுண்சிலர்கள் உட்பட விவசாயிகள் கலந்துகொண்டனர்.