புதுடெல்லி:தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்தர்
September 27, 2024
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்து, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்திட தேவையான ஒன்றிய அரசின் நிதி, சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்அடங்கிய மனுவினை வழங்கினார். இச்சந்திப்பின்போது, கழக மக்களவை குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு, கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமதி கனிமொழி, தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.