கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சியில், கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கி (வரை) எண்.118 சூளகிரி புதிய கிளை!!!
10/15/2024
0
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சியில், கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கி (வரை) எண்.118 சூளகிரி கிளையை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, 5 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.79 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு கடன் உதவிகளை வழங்கினார். உடன், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஒய்.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் திரு.எஸ்.ஏ.சத்யா, ஓசூர் சார் ஆட்சியர் திருமதி.பிரியங்கா இ.ஆ.ப., உள்ளிட்ட பலர் உள்ளனர்.
