திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை 6வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா தெரு மற்றும் அம்பேத்கர் காலனி பின்புறத்தில்பாளையங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள பல வார்டுகளில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கழிவுகளை அண்ணாதெரு பகுதியில் மலை போல் குவித்து வைத்து அள்ளி செல்வது வாடிக்கையாகவே தொடர்கிறது.இதனால் அந்த பகுதியில் வாழும் மக்கள் நோய்த்தொற்று பயத்துடன் வாழ்ந்துவருகின்றனர்.மேலும் குப்பைக்கழிவுகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புலம்பிக்கொண்டு வந்தனர்.இதன் காரணமாக டெங்கு, மலேரியா, டைபாய்டு, போன்ற நோய்கள் அப்பகுதி வாழ்மக்களுக்கு அதிக அளவில் பரவி வருவதாகவும் மக்கள் அடிக்கடி மருத்துவமனை சென்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து இப்பகுதியில்
இன்று குப்பை கொட்ட வந்த லாரியை வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா அவர்கள் தலைமையில் தடுத்து நிறுத்தி பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில்இறங்கினர். தொடர் மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தினர் போர்க்கால அடிப்படையில் உடனடியாக கழிவுகளை அகற்றி இனிவரும் காலங்களில் அங்கு கழிவுகளை கொட்டாத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

