மாண்புமிகுபோக்குவரத்துத்றை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் இன்று சென்னையில் மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், 22.69 கோடி ரூபாய் மதிப்பிலான 25 புதிய BS-VI தாழ்தள பேருந்துகளின் இயக்கத்தை, கொடி அசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டு பயணம் மேற்கொண்டார்கள். இந்நிகச்சியில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., ஜெர்மன் குடியரசின் துணை தூதரகத்தின் பொது துணை தூதர் மிச்செல குச்லர் (Michaela Kuchler), ஜெர்மன் வங்கியின் இந்திய நாட்டிற்கான இயக்குநர் திரு. உல்ஃப் முத் (Wolf ஆரவா
முதுநிலை போக்குவரத்து நிபுணர் சுவாதி கண்ணா, மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் திரு.செ.நடராஜன், சாலை போக்குவரத்து நிறுவன இயக்குநர் திரு.சு.ரங்கநாதன், தமிழ்நாடு போக்குவரத்து நிதி கழக இணை மேலாண் இயக்குநர்திரு.வெ.வெங்கட்ரான் உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.