பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் எதிரே இளைஞர் அடித்து கொலை, ஒருவர் கைது!!!

sen reporter
0



கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள  வால்பாறை பொள்ளாச்சி சாலை ஆழியாறு பூங்கா உள்ளதுஇப் பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த கிடைப்பதாக ஆழியார் காவல் நிலைய  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து, சம்பவ இடத்தில் வால்பாறை உட்கோட்டை டிஎஸ்பி ஸ்ரீநிதி தலைமையில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீனா பிரியா, சப் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், வள்ளியம்மாள், குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ரகுநாத் மற்றும்  ஆழியாறு போலீசார் சம்பவ இடத்தில் சென்று ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்  அப்போது, அங்கு இறந்து கிடந்தவர்  புதுக்கோட்டையை சேர்ந்த தேவராஜ் (35 ) என்பது தெரிய வந்தது. தேவராஜ் ஆழியாறு பகுதியில் பாட்டில்களை சேகரித்து அதை விற்பனை செய்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் ஜாகீர் தேவராஜை கல்லால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இக்கொலை குறித்து தடைய வியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர் இது குறித்து ஆழியாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top