இதில் பக்கவாதத்திற்கு சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்றவர்கள், மருத்துவர்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் உட்பட நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர், 18 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்ற இந்த மாரத்தான் கோவில் பாளையம் கே.எம்.சி.எச் மருத்துவமனை முன்பாக துவங்கிஅவினாசிசாலை கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் நிறைவு பெற்றது.நிகழ்ச்சியில் பேசிய மருத்துவமனை தலைவர்,டாக்டர் நல்லா ஜி பழனிசாமி , கோவையில் 1991-ஆம் ஆண்டு முதல்,. பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வுஏற்படுத்துவதற்காக இதுபோன்ற மாரத்தான்கள் நடத்துவதாகவும், பக்கவாத தொடர்பான நோய்களுக்கு உரிய சிகிச்சைகளை
விரைவாகவும் முன் கூட்டியே எடுத்தால் பக்கவாதத்தால் ஏற்படக்கூடிய பெரும்பாலான பின்விளைவுகளைத் தவிர்த்துவிடலாம் என்று அவர் குறிப்பிட்டார்.மாராத்தான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும்கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.இதில் கே.எம்.சி.எச்.மருத்துவ மனையின் துணை தலைவர் தவமணிதேவிபழனிசாமி, நிர்வாக இயக்குனர் அருண் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்..