PMIS எனப்படும் மைய அரசு அனுசரணையுடன் செயல்படும் திட்டம் 2024-2025 ஆண்டின் பட்ஜெட்டில் முதன் முதலில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் குறைந்த வருமானக் குழுவைச் சேர்ந்த 21 முதல் 24 வயதுக்குட்பட்ட ஒரு கோடி இளைஞர்களுக்கு ஐந்தாண்டுகளில் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் வழங்கப்படும். பல முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இந்த திட்டத்தின் முதற்கட்டம் (அறிமுக அட்டவணை - அக்டோபர் முதல் டிசம்பர் 2024 வரை) பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த சமயத்தில் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. இதே சமயத்தில், 280 முன்னணி நிறுவனங்கள் 1.27 லட்சம் இளைஞர்களுக்கான இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்கின. இவை வங்கி, FMCG, வாகன உற்பத்த மற்றும் ஆற்றல் உள்பட 25-க்கும் மேற்பட்ட துறைகளில் 745 மாவட்டங்களை உள்ளடக்கியவையாக இருந்தன.
முக்கியமாக, தமிழ்நாடு, மொத்த இன்டர்ன்ஷிப் எண்ணிக்கையின் 13.25 சதவீதத்துடன், PMIS திட்டத்தின் கீழ் 15,785 இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி மிக அதிக பங்களிப்பு வழங்கிய மாநிலமாகத் திகழ்கிறது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா (15,187), குஜராத் (11,672) மற்றும் கர்நாடகா (9,928) ஆகிய மாநிலங்கள் வருகின்றன. இந்த தரவுகள் தொழில் துறையில் முன்னேறிய மற்றும் நகரமயமடைந்த மாநிலங்களே மற்ற மாநிலங்களை விட அதிக இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குகின்றன என்பதை நிரூபிக்கின்றன. தொழில்துறை பங்குதாரர்களின் செயலில் ஈடுபாடு மற்றும் நன்கு வளர்ச்சியடைந்த நிறுவன சூழல் காரணமாக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் PMIS திட்டத்திற்கு தக்கவாறு அதிக பங்களிப்புகளை வழங்குகின்றன. இந்த திட்டத்தில் பங்கேற்கும் தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்களில் முக்கியமாக அப்போல்லோ மருத்துவமனைகள், டிவிஎஸ் மோட்டார்ஸ், ராம்கோ சிமெண்ட்ஸ், சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ், கொரோமண்டல் இன்டர்நேஷனல், ஜோஹோ கார்ப்பரேஷன், சன் டிவி நெட்வொர்க்ஸ் ஆகியவை அடங்கும்.
தேசிய அளவில், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, HDFC வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ONGC, ஐஷர் மோட்டார்ஸ், எல்&டி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், மாருதி சுசுகி இந்தியா, NTPC, ஜூபிலன்ட் ஃபுட்வொர்க்ஸ் ஆகிய பன்முக பிரபலமான நிறுவனங்கள் PMIS திட்டத்தின் கீழ் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குகின்றன.PMIS என்பது இந்தியாவின் ஜனநாயக வாசுதேவ குடும்பகத்தின் பலனை பயன்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பும், இளைஞர்களை தொழில்துறை அனுபவத்துடன் செய்யும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி, ‘விக்சித் பாரத் @ 2047’ என்ற கனவை நிறைவேற்றும் நோக்கத்தின் முன்னேற்றத்தற்கான ஒரு படியாகும்.