தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனையில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணிஸ்ரீ குமார் திடீரென ஆய்வு!!!
June 06, 2025
0
பொதுமக்களுக்கு முறையான மருத்துவம் செய்யப்படுகிறதா மருந்து மாத்திரைகள் நோயின் தன்மை அறிந்து கொடுக்கப்படுகிறதா என்பதை புளியங்குடி அரசு மருத்துவமனையில் தென்காசி எம்பி ஆய்வு மேற்கொண்டார் இதில் ஆய்வகம் எக்ஸ்ரே ஸ்கேன்அறை, மகப்பேறு பகுதி பெண்கள் உள் நோயாளிகள் பிரிவு வெளி நோயாளிகள் பிரிவு அவசர சிகிச்சை பிரிவு பல் மருத்துவம் ஆண்கள் உள் நோயாளிகள் பிரிவு சமையலறை மற்றும் பிரேத பரிசோதனை உள்ளிட்ட அனைத்து இடங்களையும் நேரில் ஆய்வு செய்தார் மேலும் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை மேற்கொள்ளும் பகுதி, பொதுமக்களுக்கு தரமான உணவு கொடுக்கப்படுகிறதா என்று சாம்பார் தயிர் மோர் பால் கூட்டு பொரியல் கீரை ஆகியவைகளை சாப்பிட்டு ஆய்வு செய்தார் இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது மாவட்ட பிரதிநிதி சுரேஷ் அன்பு ராஜன் ராஜ் மீனா முருகேசன் வார்டு உறுப்பினர்கள் வள்ளி அண்ணாமலை, பாக்கியம், தென்காசி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பிரேமலதா, மருத்துவ அதிகாரி போத்திராஜ் மற்றும் நகர திமுக நிர்வாகிகள் ஆய்வில் கலந்து கொண்டனர். மேலும் 29,30 ஆவது வார்டுகளில் சாக்கடை தேங்கி நிற்கும் பகுதிகளை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீ குமார் நகர் மன்ற துணைத் தலைவர் அந்தோணிசாமி கழக நிர்வாகிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.