தூத்துக்குடிவிளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது!!!

sen reporter
0

விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன், ஸ்ரீ மாடசாமி திருக்கோவிலின் ஆனி மாத கொடை விழாவை முன்னிட்டு, மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. போட்டியில் திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இப்போட்டியை திமுக தெற்கு ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர் இம்மானுவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பூஞ்சிட்டு மாடுகளுக்கு 5 மைல் தூரமும், தேன்சிட்டு மாடுகளுக்கு 4 மைல் தூரமும் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. போட்டியில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை நீண்ட தூரம் ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறமும் நின்று கண்டு ரசித்தனர். இதைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணுமற்றும்விளாத்திகுளம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் உள்ளிட்டோர்பரிசுத் தொகையைவழங்கிகௌரவித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top