கோவை சரவணம்பட்டி பகுதியில் எட்டு வயது முதல் பனிரெண்டு வயது வரையிலான ஆறு சிறுமிகள்,இரண்டு சிறுவர்கள் என எட்டு பேர் இணைந்து யோகாவில் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.வெவ்வேறு சாதனைகளாக நடைபெற்ற இதில் முன்னதாக சம்யுத்தா என்ற சிறுமி ஒன்றரை அடி பரப்பளவு மற்றும் உயரம் கொண்ட தொட்டியில் லாவகமாக அமர்ந்தபடி கண்டபிடராசனா எனும் ஆசனத்தை தொடர்ந்து 12 நிமிடம் 36 விநாடிகள் செய்து அசத்தினார்.தொடர்ந்து சிறுமிகள்சம்ரிதா,மேகா,அக்ஷரா, வர்ஷா,வேதா ஆகிய ஐந்து சிறுமிகளுமர எட்டு அடி உயர டவரின் மீதுஏறிபூமாசனாம்,உஷ்டாரசனம்,கோமுகாசனம்,கபோடாசனம்,மற்றும் வாமாதேவாசன என பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர்.இதே போல சிறுவர்கள் தஸ்வந்த்,மற்றும் அஸ்வந்த் ஆகியோர் டவரின் மீது ஏறி யோகாவை செய்தனர்.எட்டு சிறுவர் சிறுமிகள் இணைந்து செய்த இந்நிகழ்வு டி.சி.பி.உலக சாதனை பதிவாக பதிவு செய்யப்பட்டது.இது குறித்து யோகா பயிற்சியாளர்கள் ரூபிகா,பவ்யஸ்ரீ ஆகியோர் கூறுகையில் சிறுவர் சிறுமிகளுக்கு வழங்கிய தொடர் பயிற்சிகள் வாயிலாக இந்த சாதனையை செய்ய முடிந்ததாகதெரிவித்தனர்.தொடர்ந்து சாதனையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.