கோவை கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி!!!
8/12/2025
0
கோவையில் உள்ள கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் ஓரியண்டேஷன் நிகழ்ச்சி இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மலர்விழி நிகழ்ச்சியை தலைமை தாங்கி, மாணவர்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் வாழ்க்கையில் வெற்றிபெற நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றும் கல்லூரி காலத்தில் உங்கள்நம்பிக்கையைவளர்த்துக் கொள்ளுங்கள் என்றார். அனைத்து துறைகளிலும் ஒவ்வொரு நாளும் மாற்றம் நிகழ்கிறது என்றும் மாணவர்களாகிய நீங்கள் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதை உங்கள் துறையில் உபயோகிக்க பழகிக்கொள்ளுங்கள் என்றார்.மேலும் இந்நிகழ்ச்சியில்இக்கல்விக்குழுமங்களின் முதன்மை அதிகாரி, டாக்டர், சுந்தரராமன், ஸ்கை டெக் (SKITech) முதன்மை அதிகாரி ஜனார்த்தனன், மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் பொற்குமாரன்ஆகியோரும்உரையாற்றினர்.இந்நிகழ்ச்சியில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
