திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வருகைதரும் மூத்த குடிமக்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அறிவிப்பு!!!!
8/04/2025
0
அருள்மிகுசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருச்செந்தூர்,மூத்தகுடி மக்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் செல்லும் வழி. 60 வயது முதல் 70 வயது வரையுள்ள மூத்தகுடிமக்களை பொறுத்தவரை அவர்கள் மட்டுமே தரிசனத்திற்குசெல்லஅனுமதிக்கப்படுவர்.70 வயது மேற்பட்ட மூத்தகுடி மக்களுடன் மட்டுமே துணைக்கு ஒருவர் அனுமதிக்கப்படுவர்.மூத்தகுடி மக்கள் தங்களது வயதிற்கான ஆதாரமாக ஆதார் அடையாள அட்டை கட்டாயம் காண்பிக்கவேண்டும்.மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை காண்பிக்கவேண்டும் மூத்தகுடி மக்கள் வரிசையில் பக்தர்கள் காலை 07.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமேஅனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.