வேலூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 19 ஆவது மாவட்ட மாநாடு: புதிய நிர்வாகிகளுக்கு துணை மேயர் எம்.சுனில்குமார் பாராட்டு!!!

sen reporter
0

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட 19வது மாநாடு காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள நாராயணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் பேராசிரியர் பே. அமுதா தலைமை தாங்கினார். வேலூர் மாநகராட்சியின் துணை மேயர் எம்.சுனில்குமார் மாநகராட்சியின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை பாராட்டி பேசினார். மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்து வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் வி குமரன், மாநாட்டு பொருளாளர் பா.ராஜேந்திரன் ஆகியோர் நிதி அறிக்கை சமர்ப்பித்து பேசினார்கள். மாவட்ட துணைத் தலைவர்கள் கே. விசுவநாதன் பொன் வள்ளுவன் ஆர். காயத்ரி, வே. விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.  19ஆவது மாவட்ட மாநாட்டினை மாநில மேனாள் பொதுச்செயலாளர் சா.சுப்பிரமணி தொடக்கி வைத்து பேசினார். குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இல.சீனிவாசன் மாவட்ட இணைச்செயலாளர்கள் மு.பிரபு, என்.கோடீஸ்வரி, பி.ரவீந்திரன், சி.எப்சி, கிளைச் செயலாளர் பி.ரவீந்திரன், பொன்.வள்ளுவன், ஆர்.வேல்முருகன் வெண்ணிலா ஆகியோர் மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர். முன்னாள் மாவட்ட நிர்வாகிகளாக பணியாற்றி பணி நிறைவு பெற்ற கு.செந்தமிழ்செல்வன், முத்து.சிலுப்பன், பா.இராஜேந்திரன், சா.குமரன், ந.கருணாநிதி, எஸ்.சுப்பிரமணி, கே.விஸ்வநாதன், சி.குணசேகரன், க.பூபாலன், கார்த்திகேயன், ஆகியோருக்கு கதராடை அணிவித்து நூல்கள் வழங்கி பாராட்டப்பட்டனர். முன்னாள் மாநில பொருளாளர் கு.செந்தமிழ்ச்செல்வன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசினார். பின்வரும் புதிய நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்

வேலூர் மாவட்ட தலைவராக முத்து.சிலுப்பன், செயலாளராக முனைவர்.செ.நா.ஜனார்த்தனன், பொருளாளராக ஆர்.காயத்ரி, துணைத்தலைவர்களாக சா.குமரன், வீ.குமரன், டி.சசிகலா, இணை செயலாளர்களாக என்.கோட்டீஸ்வரி, பி.சுகுமாரன், செல்வராஜ் ஆகியோர் உள்ளிட்ட 27பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மாநாட்டின் வரவேற்பு குழு தலைவர் ஆர் சுதாகர் செயலாளர் ஆர் ராதாகிருஷ்ணன் பொருளாளர் பா.ராஜேந்திரன் எம்.ஈஸ்வரி ஆகியோர் மாநாட்டு ஏற்பாடுகளை செய்தனர். பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.வேலூர் மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்கிடவும் தரத்தை உயர்த்திடவும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்குவது

2.பள்ளிக்கல்வித்துறை யுனிசெப் நிறுவனத்துடன் அறிவியல் இயக்கம் இணைந்து அறிவியல் உபகரணங்கள் வழங்குவது

3.வானவில் மன்றம் மூலம் கணக்கு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி குறித்து பயிற்சியை பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது எனவும்

4.காட்பாடி - சேண்பாக்கம், காட்பாடி - சத்துவாச்சாரி இடையே நகர பேருந்துகளை இயக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.  

5.வேலூர் மாநகரம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பொது போக்குவரத்து மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக செப்பனிடப்பட வேண்டும் என்று அறிவியல் மாநாடு வேலூர் மாநகராட்சி மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறது.

6.வேலூர் ஒனரறியம் மற்றும் மாநகரப்பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு மாணவர்கள் சிரமம் இன்றி சரியான நேரத்திற்கு செல்லவும், மாலையில் வீடு திரும்பவும் நேரங்களிலும், தேவையான சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அறிவியல் மாநாடு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையையும், மாவட்ட நிருவாகத்தையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. முடிவில் வரவேற்பு குழு தலைவர் ஆர். சுதாகர் நன்றி கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top