வேலூர்:காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி சார்பில் காட்பாடி இரயில் நிலையத்தில் தூய்மைப் பணி!!!

sen reporter
0

 

வேலூர் மாவட்டம், காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பில், 'தூய்மை பாரதம்' (Swachh Bharat) திட்டத்தின் கீழ் காட்பாடி இரயில் நிலையத்தைத் தூய்மைப்படுத்தும் பணி இன்று சிறப்பாக நடைபெற்றது.காட்பாடி இரயில் நிலைய வளாகத்தில் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு, இரயில் நிலைய மேலாளர் வெங்கடராமன் அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு தூய்மைப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டு இரயில் நிலைய நடைமேடைகள் மற்றும் தண்டவாளப் பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களிடையே தூய்மையின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top