வேலூர்:காலபைரவருக்கு அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்!!!
4/25/2026
0
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர்- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ சொர்ணமுகீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய வளாகத்தில் ஸ்ரீ கால பைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ காலபைரவர் சிவபெருமானின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
