வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!!
5/22/2026
0
வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் வேலூர் வினோத் கண்ணன், காட்பாடி சுதாகர், அணைக்கட்டு அதிமுக வேலழகன், கே. வி. குப்பம் தென்றல் குமார், குடியாத்தம் சிந்து மற்றும் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள உத்தரவுகள் குறித்தும், அதை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி விளக்கி கூறினார்.
