நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மற்றும் 17 வது வார்டு பகுதியில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வுக்கு பின் சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றது. இதன் அம்சமாக மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மற்றும்17 வது வார்டு பகுதிகளில் ரூ.9லட்சம் மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகளை மாநகர துணை மேயர்மேரி பிரின்சிலதா கவுண்சிலர்கள் லீலாபாய் சைமன்ராஜ், கௌசிகி ஆகியோர் முன்னிலையில் மாநகர மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்.
நிகழ்வில் உதவி செயற்பொறியாளர் தேவி, மாநகர செயலாளர் வக்கீல் ஆனந்த் முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் கனி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் மாநகர துணை செயலாளர் வேல்முருகன், மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார் அவைதலைவர் பன்னீர்செல்வம் பகுதி பொறுப்பாளர் ஷேக் நகர்மன்ற முன்னாள் துணை தலைவர் சைமன்ராஜ் வட்ட செயலாளர் ரெஞ்சித் இளம்செழியன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்,