கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு பேருந்தில் பயணம் செய்யும் போது பெண்ணிடம் பணம், செல்போன் திருடப்பட்டதாக அந்த பெண் கூச்சலிட்டத்தை தொடர்ந்து நடத்துனர் காவல் நிலையத்திற்கு பேருந்தை கொண்டு சென்றார்.
போலீசார் பயணிகளிடம் தனித்தனியாக சோதனை செய்ததால் பரபரப்பு- அதில் பேருந்தில் குடிபோதையில் நின்ற சந்தேகப்பட நபரிடம் போலீசார் விசாரணை செய்தனர். திருட்டு பிரச்சனையால் பேரூந்து பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் ஒரு மணி நேர தாமத்திற்கு பின் பேரூந்து புறப்பட்டது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள் ஆனார்கள்.