மூன்று மாதத்தில் புத்தன்அணை குடிநீர் திட்டம்

sen reporter
0

 நாகர்கோவில் மாநகராட்சியில் இன்னும் மூன்று மாதத்தில் புத்தன்அணை குடிநீர் திட்டம் நிறையேற்றப்பட இருப்பதால் மாநகராட்சி பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும்  மேலும் ரூ.35 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் தெங்கம்புதூர் வரை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாகவும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட மேயர் மகேஷ் தெரிவித்தார் .



தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சியிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் நடத்தப்பட இருக்கிறது.  

இதன்படி முதல் முதலாக நேற்று (6)வியாழக்கிழமை நாகர்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது நிகழ்வுக்கு மாநகர மேயர் மகேஷ் தலைமை வைத்தார் ஆணையர் மோகன் ஆனந்த் துணை மேயர் மேரி பிரின்சிலதா பொறியாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் 

 பொதுமக்களிடம்   மக்கள் குறை தீர்க்கும் முகாம் கூட்டம் மாநகர மேயர் மகேஷ் தலைமையில் நாகர்கோவில் மாநகராட்சியில் நடந்தது   நிகழ்வின் முடிவில் நிருபர்களுடன் பேசிய மேயர் மகேஷ் குறிப்பிடும் போது நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டு பகுதியில் நான் மேயராக பொறுப்பேற்ற பின்பு ஆய்வு மேற்கொண்டேன் அதன்படி  எந்தெந்த வார்டுக்கு எந்தெந்த அவசர பணிகள் தேவையோ அதை நிறைவேற்றி உள்ளேன் இன்னும் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன இரண்டாம் கட்டமாக தற்பொழுது ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறேன்.

 தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின்  ஆணையின்படி நாகர்கோவில் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வர இருக்கிறது ஒவ்வொரு  வாரமும் வியாழக்கிழமை தோறும் இந்த கூட்டம் நடைபெறும் இக்கூட்டத்தில் மக்கள் தங்களது குறைகளை மனுக்காக  கொடுக்கவேண்டும் அது குறித்து அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து மனுதாரருக்கு பதில் அளிப்பார்கள் இதன் மூலம் மாநகரத்தில் மக்கள் சார்ந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என நம்புகிறேன் என்றார் நாகர்கோவில் மாநகராட்சி தன்னிறைவு பெற ரூ. 267 கோடி தேவைப்படும் என்று ஆய்வு செய்து ஆய்வினை தமிழக முதலமைச்சர் இடம் ஒப்படைத்தோம் அதேபோல் அமைச்சர் நேருவிடமும் ஒப்படைத்தோம் .நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நம்புகிறேன் தற்போது 111 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன .

பாதி பணிகள் முடிந்து விட்டன புத்தன் அணையில் இருந்து நாகர்கோவிலுக்கு குடிநீர் ரூ299 கோடி  மதிப்பீட்டில் புத்தன் அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவர  திட்டம்  வரையறுக்கப்பட்டு  முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது ரூ16 கோடி மதிப்பில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள்  வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. புத்தன் அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் பணிகள் முடிந்து பரிஷத்த நீரோட்டமும் நடந்து விட்டது இன்னும் மூன்று மாதத்திற்குள் இந்த திட்டம் செயல்பட்டுக்கு வரும்.

 இதன் மூலம்  நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை ஏற்படும்  மேலும் இந்த திட்டம் .ரூ. 35கோடி மதிப்பீட்டில் நாகர்கோவிலில் இருந்து தெங்கம்புதூர் வரை நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் அந்தப் பகுதியும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி இருக்கும் அதே போல் ஆளூர் பகுதிக்கும் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது .மேலும் நாகர்கோவில் மணிமண்ட சந்திப்பிலிருந்து வடசேரி வரை உள்ள சாலை இருவழிப் பாதையாக மாற்றி அமைக்கப்பட இருக்கிறது இதற்காக அனைத்து வியாபாரிகளிடமும் கலந்து பேசி அவர்களுக்கான தீர்வுகள் செய்யப்பட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top