நமது Sen News செய்தியின் எதிரொலியாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் ஆர்.சி.மேலக்கிணற்று பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான சாக்கடை பாலத்தில் உள்ள குப்பைக் கழிவுகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், குப்பைக்கழிவுகளால் நோய்த்தொற்று அச்ச உணர்வுடன் இப்பகுதியில் உள்ள சத்துணவு கூடத்திற்கு வரும் சிறுவர், சிறுமியர்களை அவர்களது பெற்றோர்கள் சத்துணவு மையத்திற்கு அனுப்ப தயக்கம் காட்டினர்.இதனை தொடர்ந்து இன்று பேரூராட்சி நிர்வாகத்தினர் குப்பைக் கழிவுகளை அகற்றியதால் சத்துணவு கூடத்திற்கு மகிழ்ச்சியுடன் குழந்தைகளை அனுப்பிய வண்ணம் இருந்தனர்.
மேலும், குப்பைக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்த உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகத்தினரை ஆர்.சி. மேலக்கிணற்று பொதுமக்கள் பாராட்டி வருவதோடு மட்டுமின்றி, சாக்கடை பாலத்தில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டாதவாறு விழிப்புணர்வு பதாகை வைத்தும் தடுப்பு கம்பிகள் அமைத்தும் கொடுக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.