தாழ்த்தப்பட்டோரை கேவலமாக பேசியும்,வீடுபுகுந்து பொருட்களை நொறுக்கியவர்களை உத்தமபாளையம் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாமஸ் காலனியில் ராஜசேகரன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருவதை தொடர்ந்து கடந்த 17-07-2023அன்று இரவு உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த சபீனா, பானு, மற்றும் பானுவின் கணவரான பாவா பக்ருதீன் இவர்களுடன் அடையாளம் தெரியாத 4நான்கு நபருடன் வந்து ராஜசேகரன் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கியும், வீட்டில் இருந்த ராஜசேகர் மற்றும் அவரது உறவினரை அடித்தும் வன்முறை ஏற்படுத்தியுள்ளனர். மேலும்,பாவா பக்ருதீன் என்பவர் ராஜசேகரனின் வீட்டில் உள்ள பெண்களை தரக்குறைவாகவா பேசியும், குறிப்பாக ராஜசேகரனின் சமூகத்தை பற்றி தவறாகவும், அசிங்கமாகவும் பேசியும் நீ எங்கு வேண்டுமானாலும் போயி புகார் கொடு என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்றும், எனக்கு காவல்துறை அதிகாரிகளை தெரியும் என்னை யாரும் கேள்வி கேள்வி கேட்க முடியாது எனவும் கூறியுள்ளார். சம்பவம் நடந்ததை தொடர்ந்து 17.07.23அன்று இரவு ராஜசேகரன் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றபோது காவல்துறையினர் மறுநாள் வரும்படி கூறியுள்ளனர். தொடர்ந்து 18.07.23அன்று புகார் கொடுக்க சென்றபோது மறுபடியும் மறுநாள் வரும்படி கூறியுள்ளனர்.19.07.23அன்று புகார் கொடுக்க சென்றபோது புகார் மனுவை வாங்கிகொண்ட காவல்துறையினர் இதுகுறித்து கண்டு கொள்ளாமலும், நடவடிக்கை எடுக்காமலும் இன்றுவரை உள்ளனர்.
காவல்துறையினரின் இந்த செயலால் உத்தமபாளையம் பகுதி மக்கள் வெறுப்படைந்துள்ளனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் புகார் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுக்ககூடாது என்று உத்தமபாளையம் காவல் நிலையத்தில் உத்தரவு ஏதும் உள்ளது?காவல்துறை அதிகாரிகளை எனக்கு தெரியும் என்னை யாரும் ஒன்றும் பண்ண முடியாது என கூறிய பாவா பக்ருதீன் என்பவருக்கு இவ்வளவு அதிகாரம் யார் கொடுத்தது?
இதுபோல் பல புகார்கள் பாவா பக்ருதீன் மேல் இருந்தும் உத்தமபாளையம் காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பது கேள்விக்குறியாகியுள்ளது? இதனை கருதி பாதிக்கப்பட்டவர் மனவேதனை அடைந்து விபரீத முடிவோ, சமூக பிரச்சனையோ எடுக்கும் முன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி பார்வையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜசேகரனின் குடும்பத்தார் உட்பட உத்தமபாளையம் உள்ள சமுதாய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.