பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து

sen reporter
0

 கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் இயங்கி வந்த ரவி என்பவருடைய மொத்த விற்பனை பட்டாசு கடையில் பயங்கர தீவிபத்து:



கிருஷ்ணகிரி காட்டினாம்பட்டி கோயில் சாலையில் ரவி என்பவருடைய பட்டாசு கடையில் இன்று காலை 9 மணி அளவில் வெடி விபத்து ஏற்பட்டதில் பட்டாசு கடையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி,பட்டாசு கடை உரிமையாளர் ரவி, மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரித்திகா, மகன் ருத்தீஷ்.அருகில் இருந்த

ஹோட்டல் கடை உரிமையாளர் ராஜேஸ்வரி , வெல்டிங் கடை உரிமையாளர்கள் இப்ராஹிம், இம்ரான், சரசு , ஜேம்ஸ் உள்ளிட்ட 12 பேர் பலி இதில் அருகில் உள்ள ஹோட்டலில் உணவு அருந்திக் கொண்டிருந்தவர் சுமார் 8க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இந்த வெடி விபத்தில் ஆங்காங்கே உடல் பாகங்கள் சிதறி கிடந்ததை பார்த்தப் பொதுமக்கள்  நெஞ்சம் பதபதைத்தது, மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக தகவல்,அருகில் உள்ள வீடுகள் பல சேதமடைந்துள்ளது.இச்சம்பவத்தால் இப்பகுதியில் உள்ள மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top