சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு நம்பர் 196ல் உள்ள ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனி 3வது குறுக்கு தெருவில் உள்ள மின்கம்பம் உடைந்து விழும் தருவாயில் உள்ளது.
இதுகுறித்து ஊர்பொதுமக்கள் மின்சார அதிகாரியிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.இந்த மின்கம்பத்திலிருந்துதான் இங்கே உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது.இந்த மின்கம்பம் பழுதடைந்துள்ளது.
இங்குள்ள மின்சார அதிகாரிகளுக்கும் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை.மின்கம்பங்கள் உடைந்து காணப்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், AE மின்சார அதிகாரிக்கும் தெரியவில்லையா? .மேலும், அங்குள்ள பொதுமக்கள் மற்றும் நடைபயணம் செல்பவர்களுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படும் வகையில் உள்ளது.
இந்த ஈஞ்சாம்பாக்காம் பகுதியில் சில இடங்களில் மின்சார கம்பங்கள் உடைந்த நிலையிலும்,மின்சார கம்பங்களில் மரக்கிளைகள் சாய்ந்து கிடக்கின்றன.இதனை அப்புறப்படுத்தாமல் மின்சார துறையினர் உள்ளனர்.