அடையார் சரகம் , காவல் துணை ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் சென்னை அடையார் காவல் நிலையத்தில் நடைபெற்றது ..
காவல் துணை ஆணையாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார் .
மேலும் இந்த நிகழ்வில் உதவி ஆணையாளர் சுதர்சன் ஆய்வாளர் ராமசுந்தரம், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்...
இக்கூட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த மனுதாரர்கள் என 50-க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் , தங்கள் குறைகளை காவல் துணை ஆணையாளரிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர் . பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த துணை ஆணையாளர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்...