கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க போதிய மருத்துவர்கள் இல்லை.
இதனால் பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்களை மருத்துவர்கள் ஊத்தங்கரையில் சுமார் 70கிலோமீட்டர் தொலைவில் உள்ள தருமபுரி,கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர்.
சில கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கு செல்லும் வழியில் உயிரிழப்பு ஏற்படுகிறது, இதனால் ஊத்தங்கரை அரசு மருத்துவமணைக்கு பிரசவ பிரிவுக்கு போதிய மருத்துவர்களை பணி அமர்த்த தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்