நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர்மேயர் ரெ மகேஷ் தலைமையில் நடைபெற்றது பொதுமக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை கோரிக்கை மனுவாக அளித்தனர்.
உடனடியாக தீர்வு காணும் புகார் மனுக்களுக்கு துறை சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மேயர் உத்தரவிட்டார் மாநகராட்சி ஆணையாளர் உதவி ஆணையாளர் துணை மேயர் மாநகராட்சி பொறியாளர் மாநகராட்சி நல அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்