கிணற்றில் விழுந்த நாயை உயிருடன் மீட்ட தேனி தீயணைப்பு துறையினர்!

sen reporter
0

 தேனி அன்னஞ்சி விலக்கில் ராம்சிங் தோட்டத்தில் உள்ள 100அடி ஆழமுள்ள கிணற்றில் நாய் ஒன்று விழுந்து போராடிக்கொண்டிருப்பதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தேனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

 தகவலை தொடர்ந்து விரைந்து வந்த தேனி உதவி மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெ.ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வீரர்கள் 100அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி போராடிக்கொண்டிருந்த நாயை உயிருடன் மீட்டனர்.உடன் நிலைய அலுவலர் போக்குவரத்து து. நாகராஜ் இருந்தார்.உயிருடன் நாயை மீட்ட தேனி தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top