கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு ( JAC ) சார்பாக தமிழ்நாடு முழுவதும் கல்லூரி முன்பு வாயிற் போராட்டம் நடைபெற்றது.
தெ.தி. இந்துக் கல்லூரி நாகர்கோவில் கல்லூரி வாயிற் முன்பு தமிழ்நாடு முழுவதும் பொது பாடத் திட்டத்தை எதிர்த்து நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர். முனைவர். அய்யப்பன் (தலைவர் மூட்டா கிளை) தலைமை தாங்கினார். முனைவர். மகேஷ் (செயலர் மூட்டா கிளை )வரவேற்று பேசினார். முன்னாள் மூட்டா தலைவர் முனைவர். இராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மூட்டா கிளை பொருளாளர் முனைவர் சுப்பையா நன்றியுறையாற்றினார்.