கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை மீட்க, இந்திய கடற்படை விமானங்கள் சோமாலியா புறப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு மால்டா நாட்டு சரக்கு கப்பலை சோமாலியாவை சேர்ந்த கடல் கொள்ளையர்கள் நடுக்கடலில் கடத்தி சிறை வைத்தனர்.
மால்டா, இந்தியாவின் உதவியை நாடிய நிலையில், கப்பலை மீட்க இந்திய கடற்படை விமானங்கள் மற்றும் ரோந்து படகுகள் சோமாலியா விரைந்துள்ளன.