வெள்ளிக்கவசம்
தை மாத கிருத்திகையை முன்னிட்டு வேலூர் கோட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ பாலமுருகனுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
