திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு.தெ. பாஸ்கர பாண்டியன்.இ.ஆ.ப, அவர்களின் பெயர் மற்றும் புகைப்படத்தைக்கொண்டு வாட்ஸ் ஆப் மற்றும் முகநூல் மூலம் சிலர் போலியான கணக்குகளை தொடங்கி அதன் மூலம் பணம் கேட்பதாக தகவல் வெளியானது.
ஆகையால், வாட்ஸ் ஆப் மற்றும் முகநூல் மூலம் ஆட்சியர் பெயரில் பணம் கேட்டால் யாரும் பணத்தை அளிக்க வேண்டாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்.இ.ஆ.ப அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
