தேனி மாவட்டம் : ஆண்டிபட்டி தீயணைப்பு துறையினரிடம் சிக்கிய மண்ணுளி பாம்பு!!!
1/27/2024
0
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூர் அருகே ஆசிரியர் ராஜேந்திரன் என்பவர் வீட்டில் பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து ராஜேந்திரன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலை தொடர்ந்து விரைந்து வந்த ஆண்டிபட்டி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் பா.கண்ணன் தலைமையிலான வீரர்கள் பாம்பை லாவகமாக பிடித்தனர்.பிடிப்பட்டது மண்ணுளி பாம்பு என்றும் இதனை அடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
