சென்னை மாவட்டம் 194(அ)வட்டம் ஈஞ்சம்பாக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 3ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் விதமாக இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியானது மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்
அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களும், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் S.அரவிந்த் ரமேஷ் அவர்களும் ,15வது மண்டலக் குழு தலைவர் V.E மதியழகன் அவர்களும் வந்து விழாவை தொடங்கி வைத்தனர்.மேலும், இந்நிகழ்வில் 194வது வார்டு கவுன்சிலர் விமலா கர்ணா,வட்ட செயலாளர் S.கர்ணா, மாவட்ட பிரதிநிதி தாஸ் இவர்களுடன் 194அ வட்ட கழக நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
