சென்னை பட்டாபிராமில் உள்ள FWH ஜெபவீடு வழிபாட்டு தலத்தை இடித்த அரசு அதிகாரிகளின்மீது தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்களா?
சென்னை மாங்குளம் தண்டுரை, பட்டாபிராமில் FWH ஜெபவீடு என்ற வழிபாட்டு தலம் பல ஆண்டுகளாக உள்ளது.இந்த வழிபாட்டு தலத்தை அரசு அதிகாரிகள் இடித்துவிட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எந்தவித முன் அறிவிப்புமின்றி கடந்த 11.03.24 அன்று காலை 6.30மணி அளவில் அரசு அதிகாரிகள் வழிபாட்டு தலத்தை ஜேசிபி வைத்து இடித்து தள்ளியதால் இப்பகுதி சிறுபான்மை மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இப்பகுதியில் மற்ற மத வழிபாட்டு தலங்கள் இருந்தும் சிறுபான்மையி மக்கள் வந்து செல்லும் FWH ஜெபவீடு வழிபாட்டு தலத்தை அதிகாரிகள் இடித்து தள்ளிய காரணம் என்ன?
பல வருடங்களாக செயல்பட்டுவந்த வழிபாட்டு தலத்தை புறம்போக்கு இடத்தில் இருப்பதாக கூறி பழிவாங்கும் நோக்கில் அரசு அதிகாரிகள் இடித்து தள்ளியுள்ளதாக அப்பகுதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிறுபான்மை மக்களை வழிபாட்டு தலத்தை இடித்த அரசு அதிகாரிகளால் பொதுமக்கள் கண்ணீர் வடித்துள்ளனர்.
சிறுபான்மையினர் நடத்திவரும் வழிபாட்டு தலத்தை இடித்த அரசு அதிகாரிகளின் மீது தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் நடவடிக்கை எடுக்ககோரி மக்கள் ஒற்றை கோரிக்கை விடுத்துள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்.
FWH ஜெபவீடு
No 37 pillaiyar Kovil Street mangulam thandurai Pattabiram




