தூத்துக்குடி மாவட்டம் : விபத்தில் 2பெண்கள் உட்பட 3 பேர் பலி!? 4பேர் படுகாயம்!

sen reporter
0


 தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே ட்ரை சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2பெண்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கன் மகன் சிலம்பரசன் (35). ஆறுமுகம் மனைவி மாரியம்மாள் (66), சிலம்பரசன் மனைவி தங்கம்மாள் (35), முருகன் மகன் சதீஷ் (7) ஆகிய 4பேரும் மோட்டார் மாட்டிய மூன்று சக்கர சைக்கிளில் ஊர் ஊராக சென்று பழைய பேப்பர் அட்டை பிளாஸ்டிக் பாட்டில் வாங்கி தூத்துக்குடியில் உள்ள கடையில் விற்பனை செய்து வந்தனர். 

இன்று கிழக்கு கடற்கரை சாலை ரோட்டில் வேம்பார் அருகே உள்ளகீழ சண்முகபுரம் கிராமத்தில் பழைய பேப்பர்களை வாங்கிக் கொண்டு சாலையைக் கடக்கும் போது கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற கார் மூன்று சக்கர சைக்கிள் மீது மோதியது இந்த விபத்தில் மாரியம்மாள், தங்கம்மாள், சதீஷ் ஆகிய 3பேர்களும்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்த சிலம்பரசன், காரில் வந்த குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (55), அவரது மனைவி குமரித்தங்கம் (49),  கார் ஓட்டி வந்த அவரது மகன் ஜெனிட் (29) ஆகிய 4பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து சூரங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) வெங்கடேச பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top