பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, ஜிஆர்பி நிறுவனம், எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளி சார்பாக, சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.1 கோடியே 40 இலட்சம் மதிப்பில் ஆறு வகுப்பறைகள் கொண்ட கட்டிடங்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில்
இன்று திறந்து வைத்தார். உடன் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.கோபிநாத், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஒய்.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் திரு.எஸ்.ஏ.சத்யா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கட்சி பிரமுகர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.