கோத்தகிரி லோயர் பஜார் பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவரது மகன் சுரேஷ்குமார்(வயது 42). இவர் கோத்தகிரி பஸ்நிலையம் பகுதியில் துணி சலவை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கவிதா(வயது 40) என்கிற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். சுரேஷ்குமார் களுக்கு பல வருடங்களாக குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி.குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம் எனவும் கூறப்படுகிறது. சுரேஷ்குமார் கடந்த 6 மாதங்களுக்கு முன் குடிபோதையில் தனக்கு வாழ பிடிக்கவில்லை எனக் கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்துள்ளார். அவரது முயற்சியை குடும்பத்தினர் தடுத்துள்ளாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 2 வாரத்திற்கு முன் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதால், அவரது மனைவி கவிதா கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்று அங்கேயே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தான் தற்கொலை செய்துக் கொள்ள போவதாக சுரேஷ்குமார் தனது மனைவிக்கு போன் செய்து கூறியுள்ளார். இதையடுத்து நேற்று காலை சுரேஷ்குமார் தனது வீட்டில் உள்ள அறை ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி கவிதா கோத்தகிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேஷ்குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.