சென்னை :முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி தொண்டர்கள் குடும்பத்தினருக்கு 52 லட்சம் நிதி உதவி வழங்கினார்

sen reporter
0

மறுமலர்ச்சி திமுகவின் மாநில தொண்டரணி துணைச் செயலாளர் பா.பச்சமுத்து, மதுரை மாநகர் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பா.அமிர்தராஜ், மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் புலி சேகர்  ஆகிய மூன்று பேர் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து விட்டு, மதுரைக்கு திரும்பிய போது சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் வேண்டுகோளின் படி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு  கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் நிதி அளித்து வந்தனர்.

திரட்டப்பட்ட 52 இலட்சம் ரூபாய் நிதியை, கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ  எம்.பி. அவர்கள்  08.09.2024 ஞாயிற்றுக் கிழமை மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூவரின் குடும்பத்தினரிடம் அளித்தார்.சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் மு.பூமிநாதன், டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் சி.கிருஷ்ணன், மாவட்ட;ச செயலாளர் சு.ஜீவன், எஸ்.முனியசாமி, எம்.மார்னாடு, கே.பி.ஜெயராமன், என்.செல்வராகவன், ஈரோடு நா.முருகன், வேல்முருகன், பசும்பொன் மனோகரன் மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் தி.சுப்பையா, தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கர சேதுபதி, ஆபத்து உதவிகள் அணி செயலாளர் சுமேஷ், மகளிர் அணி செயலாளர் மல்லிகா தயாளன், மணிகண்டன் பூமிநாதன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top