கோவையில் இரத்தினபுரி கோ கோ கிளப் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான கோ கோ போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

sen reporter
0

கோவை இரத்தினபுரி கோ கோ கிளப் சார்பாக மாவட்ட அளவிலான கோ கோ போட்டி,கவுண்டர் மில் பகுதியில் உள்ள புனித ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல் நிலைபள்ளி வளாகத்தில் நடைபெற்றது..

முன்னதாக போட்டி துவக்க விழாவில்,சிறப்பு விருந்தினராக சென்ட்ரல் எக்சைஸ் மற்றும் ஜிஎஸ்டி சூப்ரிடெண்ட் ஸ்னேகா பிரின்ஸி கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்..

இதில் கவுரவ அழைப்பாளராக புனித  ஜான் போஸ்கோ பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர்  ஆயர் பிச்சை ராபர்ட்  கலந்து கொண்டார்.

14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் என தனி தனி பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.

நாக் அவுட் போட்டிகளாக நடைபெற்ற போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஐம்பதிற்கும்  மேற்பட்ட  அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாணவர் பிரிவில் என்.ஜி.ஆர்.பள்ளி முதலிடத்தை பிடித்து கோப்பையை கைப்பற்றினர்இரண்டாவது இடத்தை ஜான் போஸ்கோ பள்ளியும்,மூன்றாம் இடத்தை டி.கே.எஸ்.பள்ளி,நான்காம் இடத்தை மதுக்கரை பிருந்தாவன் பள்ளியும் பிடித்தன.இதே போல மாணவிகளுக்கான பிரிவில்,சுகுணா பிப் பள்ளி முதலிடத்தை பிடித்து கோப்பையை கைப்பற்றியது.

இரண்டாம் இடத்தை விவேக் வித்யாலாயா,என்.ஜி.ஆர்.பள்ளி மூன்றாம் இடம்,கவுண்டம்பாளையம் மாநகராட்சி மேல்நிலை பள்ளி நான்காம் இடத்தையும் பிடித்தது..

தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சிறந்து விளையாடிய  மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது..

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை இரத்தினபுரி கோ கோ கிளப் நிர்வாகிகள்  பிரின்ஸ் லீன் ரூபன்,பிரகாஷ்,மதன் குமார்,தர்மபிரபு,

கவுதம்ராம்குமார் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்..

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top