கிருஷ்ணகிரி: சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது,குட்கா பொருட்கள் பறிமுதல்
9/21/2024
0
கிருஷ்ணகிரிமாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது சேலம் பஸ் நிறுத்தம் இடத்திற்கு அருகே சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹8,400/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது. குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
